
இப்ப யாழ்பாணத்தில எல்லாரும் வீடுகளுக்கு கேபிள் மூலமாகதான் தொ(ல்)லைகாட்சி சேவைகளை பெறுகின்றனர்.என்ர வீட்ட கிரிகெட் பார்க்க விடாம முழு நேரமும் சுட்டி ரிவிதான்.சண் ரிவி கலாநிதி மாறன்,தயாநிதி மாறனோட ஏற்பட்ட முறுகலோட கலைஞர்,கலைஞர் ரிவி தொடங்கினார்.இப்ப அனைத்து ரிவியும் ஒரே மாதிரியான நிகழ்ச்சியை வேறு நபர்களை வைத்து செய்கிறார்கள்.ஒன்டு பார்த்தா மற்றது பார்க்கதேவையில்லை.இப்ப அடுத்ததாக கலைஞர் ரிவியினர் 24மணி நேர இசை(இசையருவி) மற்றும் 24மணி நேர செய்தி சேவையும் தொடங்க போறாங்களாம்.சன் டிவிக்கு நிகராக கலைஞர் டிவிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பாமகவின் மக்கள் டிவியைப் போலவே கலைஞர் டிவியும் முடிந்தவரை நல்ல தமிழ் என்ற பாணியைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.எல்லா நிகழ்சிக்கும் தமிழ் பெயர் வைத்து கலைஞர் தன்ர தமிழ்ப்பற்ற காட்டுறார்.இது வரவேற்க படவேண்டிய விடயம். இப்ப ஒன்டே பார்க்க நேரமில்லை.யாழ்ப்பணச்சனம் கேபிள்காற்ர் காசு வாங்க வரேக்க பிள்ளைகள் படிக்கிதில்லை சுட்டி ரிவியை நிப்பாட்டுங்கோ,ஆன சண்ரிவியை மட்டும் நிப்பட்டாதேங்கோ(கோலங்கள் பார்க்கணும்)என்டு சொல்லிறதை கேட்டா சிரிப்புதான் வருகிது.
No comments:
Post a Comment