Monday, October 22, 2007

வர்ண மொழி

இன்று என்ர நண்பர்களுடன் வர்ண மொழி கண்காட்சி பார்ப்பம் என்டு மருதனார்மடம் இராமநாதன் நுண்கலைப்பீடத்திற்கு போனேன்.வாசல் வழியாக உள்நுளைந்ததும் அவர்களால் வைக்கப்பட்டிருந்த சீமெந்தினால் அமைக்கப்பட்ட சிற்பங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.அவை வெண்கல முலாம் பூசப்பட்டிருந்தன.அவற்றில் ஒன்று ஈட்டியால் மனிதன் ஒருவன் பாம்பை கொல்வது போன்று அமைக்கப்பட்டிருந்தது தத்துருபமாக இருந்தது.பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தன.போட்டோசொப்பை உபயோகித்து செய்த சித்திரங்களும் நன்றாக இருந்தன.மண்,சீமெந்து,கழிவுப்பொருட்களை வைத்து செய்யப்பட்ட சிற்பங்கள் மிகவும் சிறப்பாக பல விடயங்களை எடுத்து கூறுவதாக இருந்தன.சிகரட் அடிக்கட்டயை வைத்து மனித தலையை உருவாக்கி இருந்தார்கள்(யார்தான் இவ்வளவு சிகரட்டை ஊதித்தள்ளினார்களோ தெரியவில்லை). சுனாமியால் இறந்த ஒரு குழந்தயை காகம்,நாய் குதறுவது போல உருவகிக்கப்பட்ட சீமெந்தினால் ஆன சிற்பம் மீண்டும் சுனாமியை நினைவூட்டின.யாழ்ப்பாண கலைப்படைப்புகளை ஊக்குவிக்கும் இவ்வாறான செயற்பாடுகள் வரவேற்கப்படவேண்டிய ஒன்றுதான்.20 ரூபாவிற்கு நல்ல ஒரு பொழுதை கழித்து சிறந்த கண்காட்சி பார்த்த உணர்வுடன் வெழியேறினேன்.

No comments: