Wednesday, October 17, 2007

அல்கோர், ஐ.நா.சுற்றுச்சூழல் அமைப்புக்கு நோபல் சமாதானப் பரிசு


உங்களுக்கு தெரியும் அல்பிரட் நோர்பல் டைனமைட் கண்டுபிடிச்சார்.பின்னர் அது அழிவுப்பாதையில் உபயோகிக்கப்படுவதை பார்த்து,அதிலிருந்து உழைச்ச பணத்தை சுவிஸ் வங்கியில வைப்பிட்டு,அதிலிருந்து வாற பணத்திலிருந்து நோபல் பரிசு வழங்க உதரவிட்டு மறைந்தார்.இந்த ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி அல்கோருக்கும் ஐ.நா.சுற்றுச்சூழல் அமைப்புக்கும் வழங்கப்பட்டுள்ளது. நோர்வே நோபல் குழு இந்த ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசை அறிவித்தது. புவி வெப்பமயமாவதால் ஏற்படும் பாதிப்புப் பற்றியும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காகவும் அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி அல்கோருக்கும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் அங்கம் வகிக்கும் ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்புக்கும் (ஐ.பி.சி.சி.) நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ரூபா 16 கோடி மதிப்புள்ள இந்தப் பரிசை இருவரும் பகிர்ந்து கொள்வர். இதுபற்றி நோபல் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தனிமனிதராக பல்வேறு பணிகளைச் ெசய்துள்ளார் அல்கோர். சுற்றுச்சூழல் பற்றி உலகின் பல்வேறு பகுதிகளில் அவர் உரை நிகழ்த்தி வருகிறார். புவி வெப்பமயமாவதால் ஏற்படும் பாதிப்பை விளக்கும் ஆவணப் படம் ஒன்றையும் அவர் தயாரித்தார். பார்பம் இலங்கையில எப்ப யர்ருக்கு கிடைக்க போகிதென்டு.நீங்களும் முயற்சி எடுங்கோ.

No comments: